Thursday, 3 November 2011

சென்ஷோ-8 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது

நவம்பர் திங்கள் முதல் நாள் காலை 5:58 மணியளவில் சீனாவின் சென் ஷோ-8 விண்கலம் ச்சியு ச்சுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்குள் இது சீனாவின் தியேன்குங்-1 விண்கலத்துடன் இணையும்.
சென்ஷோ-8 விண்கலம் 58 மீட்டர் உயரமான லாண்மார்சு-2 F ஏவூர்தி மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு, புவியின் மையத்திலிருந்து குறைவான தூரம் 200 கிலோமீட்டரும், அதிகமான தூரம் 329.8 கிலோமீட்டரும் கொண்ட ஆரம்ப சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. சீன ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணத் திட்டத்தின் தலைமை ஆணையாளர் சாங் வான்சுவான் இந்த வேளையில், சென்ஷோ-8 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்று அறிவித்தார்.
1999ம் ஆண்டு முதல் முறையாக சென்ஷோ-1 விண்கலத்தை சீனா செலுத்தியது. சீனாவின் ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணத் திட்டப்படி, ஆட்கள் நீண்டகாலமாக தங்கியிருக்கக் கூடிய விண்வெளி நிலையத்தைக் கட்டியமைக்கும் பணி மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்படும். இந்த முறை சென்ஷோ-8 மற்றும் தியேன்குங்-1 விண்கலங்களின் இணைப்பு 2வது கட்டத்தின் முக்கிய பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ஷோ-8 விண்கலத்தின் நீளம் 9 மீட்டராகும். அதன் எடை 8.802 டன்னாகும். சீன ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணத் திட்டப்பணியின் செய்தித் தொடர்பாளர் வூ பிங் அம்மையார் கூறியதாவது
விண்கலத்தில் 600க்கு மேற்பட்ட சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் பாதி அளவில் தொழில்நுட்பச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.
புதிய இணைப்புக் கடமையை நிறைவேற்ற, ஏவு மையம், ஏவூர்தி முதலிய தொகுதிகளில் பெரிதளவு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சென்ஷோ-8 விண்கலத்தில் விண்வெளி உயிர் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்படும். விண்வெளி அறிவியல் பயன்பாட்டுத் துறையில் சீனா சர்வதேச ஒத்துழைப்பில் முதல்முறையாக ஈடுபடும். சீனா மற்றும் ஜெர்மன் அறிவியலாளர்கள் மொத்தமாக 17 அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்வர்.
சென்ஷோ-9, சென்ஷோ-10 விண்கலங்கள் அடுத்த ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும் என்று வூ பிங் அம்மையார் தெரிவித்தார்.

சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு ! சூரிய புயல் திடீர் என வருமா?

                                                                                                                                நன்றி தினமணி
சுமார் ஐந்தரை ஆண்டுகள் அமைதியின் சொரூபம். பின்னர் ஐந்தரை ஆண்டுகள் ஆக்ரோஷத் தாண்டவம். பொதுவில் சூரியனில் இதுதான் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  இப்போது சூரியன் ஆக்ரோஷத்தைக் காட்டவேண்டிய காலம். ஆனால், அமைதியாக இருக்கிறது. இது ஏன் என்பதுதான் விளங்கவில்லை. 
விஞ்ஞானிகள் திகைத்து நிற்கின்றனர்.  கண்ணைக் கூச வைக்கிற அளவுக்கு மிகப் பிரகாசமான ஒளித்தட்டாக சூரியன் காட்சி அளிக்கிறது. ஆனாலும் குழந்தைகளுக்கு முகத்தில் வைக்கும் திருஷ்டிப் பொட்டுபோல, சூரியனின் மேற்புறத்தில் அவ்வப்போது கரும்புள்ளிகள் தென்படுகின்றன. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட விஷயம்.  இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ 1612-ம் ஆண்டில் தமது சிறிய தொலைநோக்கி மூலம் சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்து வரைபடமே தயாரித்தார். கட்டுரைகளையும் எழுதினார். கிட்டத்தட்ட அப்போதிலிருந்தே சூரியனின் ஒளித்தட்டு தொடர்ந்து ஆராயப்பட்டு வந்துள்ளது.
 சூரியனில் கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது. ஒருசமயம் கரும்புள்ளிகளே இராது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒருகட்டத்தில் அது உச்சத்தை எட்டும். பின்னர் அதேபோல மறைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் கரும்புள்ளிகளே இராது. பிறகு மறுபடி அவை தோன்ற ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் ஒரு காலக்கணக்கு உள்ளது.  அதாவது கரும்புள்ளிகள் தெரிய ஆரம்பித்து உச்சத்தை எட்டுவதற்கு சுமார் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். பிறகு அவை படிப்படியாகக் குறைந்து புள்ளிகள் மறைவதற்கு அதேபோல ஐந்தரை ஆண்டுகள் பிடிக்கும்.  ஆக மொத்தம், 11 ஆண்டுகள் ஆகும். இது 11 ஆண்டு கரும்புள்ளிக் காலச்சுழற்சி என்று குறிப்பிடப்படுகிறது. சில சமயங்களில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 200 வரை இருக்கலாம். உதாரணமாக, 1954-ம் ஆண்டில் 201 கரும்புள்ளிகள் தென்பட்டன.  கரும்புள்ளிகள் முதலில் சூரியனின் நடுக்கோட்டுக்கு மேலேயும் கீழேயும்தான் தோன்றுகின்றன. பின்னர் சூரியனின் நடுப்பகுதியிலும் இவை தோன்றுகின்றன. பெயர்தான் கரும்புள்ளியே தவிர, கரும்புள்ளி ஒவ்வொன்றும் பிரம்மாண்டமானது. சிறிய கரும்புள்ளிகூட ஒரு பூமியை உள்ளே இறக்கி விடலாம் என்று சொல்லத்தக்க அளவில் மிகப்பெரியது. உண்மையில் சூரியனின் கரும்புள்ளிகள் கருமையானவை அல்ல. சூரியனின் மேற்புறத்தில் மற்ற இடங்களைவிட வெப்பம் குறைவான பகுதிகளே நமக்குக் கரும்புள்ளிகளாகத் தெரிகின்றன.
 சூரியனில் மிக நீண்ட காலம் கரும்புள்ளிகளே தோன்றாமல் போகுமா? கடந்த காலத்தில் நமக்குத் தெரிந்து குறைந்தது நான்கு தடவை அவ்விதம் ஏற்பட்டுள்ளது. கி.பி. 1645 முதல் 1715-ம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை. சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்தவரான எட்வர்ட் மாண்டர் என்ற விஞ்ஞானியைக் கௌரவிக்கும் வகையில் இக் காலகட்டத்துக்கு "மாண்டர் மினிமம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர் கி.பி. 1280 - 1350 காலகட்டத்திலும் கி.பி.1460 - 1550 காலகட்டத்திலும் இவ்வித நிலைமை இருந்தது. மாண்டர் மினிமத்துக்குப் பிறகு கி.பி. 1790 முதல் 1830-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலும் இதேபோல சூரியனில் அனேகமாகக் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.  கரும்புள்ளிகள் நிறைய இருந்தால் என்ன அல்லது இல்லாவிட்டால் என்ன என்று கேட்கலாம். சூரியனில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுமானால் அது பூமியில் நம்மைப் பல வகைகளிலும் பாதிக்கிறது.  சூரியனிலிருந்து இயல்பாக ஆற்றல் மிக்க துகள்கள் (இதைச் சூரியக்காற்று என்றும் சொல்வதுண்டு) வெளிப்பட்டு வருகின்றன. கரும்புள்ளிகள் அதிகமாகத் தோன்றும் காலகட்டத்தில் சூரியனிலிருந்து இவ்விதத் துகள்கள் அதிக அளவில் அதிக வேகத்தில் வெளிப்படுகின்றன.  இவை பூமியை அதாவது மக்களைத் தாக்காதபடி பூமியின் காந்த மண்டலம் தடுத்து விடுகிறது. சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்கும்போது சூரியனில் கடும் சீற்றம் ஏற்படுகிறது. தவிர, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்படுகிறது.  இந்த உருண்டை பூமியின் காந்த மண்டலத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. இதை விண்வெளியிலிருந்து பயங்கர மின்னல் தாக்குவதற்கு ஒப்பானது என்றும் கூறலாம்.  இதன் விளைவாக, நீண்ட தூரம் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் கம்பிகளில் கூடுதல் மின்சாரம் தோன்றி மின்சார டிரான்ஸ்பார்மர்கள் வெடிக்கும். இதனால் பெரிய பிராந்தியத்தில் மின்சப்ளை பாதிக்கப்படும்.
 1989-ம் ஆண்டில் கனடாவின் கிழக்குப் பகுதியில் இவ்விதம் மின்சப்ளை பாதிக்கப்பட்டு 6 கோடி மக்கள் பல மணி நேரம் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர். வடகிழக்கு அமெரிக்காவிலும் மற்றும் சுவீடன் நாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டது.  இப்போது அது மாதிரி சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் முகில் தாக்குமானால் பல நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு கோடானுகோடி மக்கள் பாதிக்கப்படுவர். மின்சார சாதனங்களையும் இயந்திரங்களையும் சீர்படுத்த பல ஆண்டுகள் பிடிக்கும். தவிர, சூரியனிலிருந்து வெளிப்படும் ஆபத்தான ஆற்றல் முகில், தொலைபேசித் தொடர்பு உள்பட தகவல் தொடர்பு சாதனங்களையும் பாதிக்கும். தரைக்கு மேலே அமைந்த எண்ணெய்க் குழாய்களையும் இது பாதிக்கும்.  பூமியைச் சுற்றுகிற செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை வேகம் பாதிக்கப்பட்டு அதனால் அவற்றின் ஆயுள் குறையும்.  பூமியைச் சுற்றுகிற விண்வெளி நிலையத்திலிருந்து யாரேனும் வெளியே வந்து அந்தரத்தில் பணியாற்ற நேர்ந்தால் கடும் கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். பூமியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இவ்விதம் அடுக்கிக் கொண்டே போகலாம்.  சூரியனில் கரும்புள்ளிகள் அனேகமாக இல்லாத காலம் முடிந்து புதிய 11 ஆண்டுகால சுழற்சி கடந்த 2008 டிசம்பரில் தொடங்கியது. அப்போதே அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸô 2011 வாக்கில் சூரியனின் ஒளித்தட்டில் 150 முதல் 200 கரும்புள்ளிகள் தென்படலாம் என்று கூறியது. ஆனால், அப்படி நிகழவில்லை.  2011-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வரையிலான புள்ளிவிவரப்படி தொடர்ந்து 820 நாள்களுக்கு சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.  நியாயமாகப் பார்த்தால் 2012-ம் ஆண்டில் சூரியனின் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்ச அளவை எட்ட வேண்டும். ஆனால், அப்படி நிகழும் என்று தோன்றவில்லை. 
சூரியனின் வழக்கமான போக்கு மாறிவிட்டது போலத் தோன்றுகிறது.  இதில் வேடிக்கை என்னவென்றால் 2012-ம் ஆண்டு வாக்கில் சூரியனில் அதிகபட்சமாகக் கரும்புள்ளிகள் தோன்றும் என்றும், அதன் விளைவாக சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்படும் என்றும், அதையடுத்து பூமிக்கே ஆபத்து ஏற்படும் என்ற கற்பனை அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட் தயாரிப்பாக ஓர் ஆங்கிலப் படம் வெளியானது. இந்தியாவிலும் அது திரையிடப்பட்டது.  உள்ளபடி இப்போது சூரியனில் கரும்புள்ளிகள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. ஆகவே, சூரியனில் சீற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். 2010 ஆகஸ்டிலும் 2011 பிப்ரவரியிலும் சூரியனிலிருந்து ஆற்றல் முகில் வெளிப்பட்டு பூமியை நோக்கி வந்தன என்றாலும் பொதுவில் சூரியன் அமைதியாக இருக்கிறது.  சூரியனின் கரும்புள்ளிகள் விஷயத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து காணப்பட்டு வந்த 11 ஆண்டு காலச் சுழற்சி மறைந்து முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் நிகழ்ந்ததுபோல தொடர்ந்து நீண்ட காலம் சூரியன் அமைதியாக இருந்து வருமோ என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கியுள்ளனர்.  சூரியனில் அப்படியான அமைதி நிலை ஏற்பட்டால் பூமியில் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்பு ஒன்று உண்டு. அதாவது, பூமியில் குறிப்பாக வட பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை குறையும். முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் ஐரோப்பாவின் வட பகுதியில் அமைந்த நாடுகளில் பல பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டன.  அதுபோல இப்போது பொதுவில் பூமியில் வெப்ப நிலை குறையலாம். ஆனாலும் இது காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்து வருவதால் பூமியின் சராசரி வெப்ப நிலை அதிகரித்து வருகிற பிரச்னையை சரிக்கட்டி விடாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்பட்டு, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்பட்டு, அது பூமியை நோக்கி வந்தால் பூமியில் தகவல் தொடர்பு உள்பட பலவும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறினோம்.  ஆகவே, இவை பற்றி முன்கூட்டி அறிந்து கொள்வதற்காக சூரியனை ஆராயும் பொருட்டு சில ஆளில்லா செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று "ஏசிஇ' என்பதாகும். இது தொடர்ந்து சூரியனை ஆராய்ந்து வருகிறது. சூரியனில் நிகழும் முக்கிய மாற்றங்களை இது ஆராய்ந்து தகவல் அனுப்புகிறது. ஆகவே, நாம் உஷாராகி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போதிய அவகாசம் கிடைக்கிறது.  சூரியனில் நிகழும் மாற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது பற்றி நீண்ட நாள்களாகவே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக பல கொள்கைகளும் கூறப்பட்டுள்ளன. ஆனாலும் நம்மால் இன்னும் சூரியனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.  ஆகவேதான் சூரியனில் கரும்புள்ளி இல்லாத காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நம்மால் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. சூரியனின் கரும்புள்ளிகளுக்கும் பூமியின் பருவ நிலைமைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உள்ளது.
விஞ்ஞானிகள் விசேஷ கருவிகளைப் பயன்படுத்தி சூரியனை ஆராய்கிறார்கள். ஆகவே, சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளனவா என்று கண்டறிய ஒருபோதும் சூரியனை வெறும் கண்ணால் பார்க்கலாகாது. அவ்விதம் செய்தால் நிச்சயம் கண் பார்வை போய்விடும்.  மார் ஐந்தரை ஆண்டுகள் அமைதியின் சொரூபம். பின்னர் ஐந்தரை ஆண்டுகள் ஆக்ரோஷத் தாண்டவம். பொதுவில் சூரியனில் இதுதான் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  இப்போது சூரியன் ஆக்ரோஷத்தைக் காட்டவேண்டிய காலம். ஆனால், அமைதியாக இருக்கிறது. இது ஏன் என்பதுதான் விளங்கவில்லை. விஞ்ஞானிகள் திகைத்து நிற்கின்றனர்.  கண்ணைக் கூச வைக்கிற அளவுக்கு மிகப் பிரகாசமான ஒளித்தட்டாக சூரியன் காட்சி அளிக்கிறது. ஆனாலும் குழந்தைகளுக்கு முகத்தில் வைக்கும் திருஷ்டிப் பொட்டுபோல, சூரியனின் மேற்புறத்தில் அவ்வப்போது கரும்புள்ளிகள் தென்படுகின்றன. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட விஷயம்.  இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ 1612-ம் ஆண்டில் தமது சிறிய தொலைநோக்கி மூலம் சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்து வரைபடமே தயாரித்தார். கட்டுரைகளையும் எழுதினார். கிட்டத்தட்ட அப்போதிலிருந்தே சூரியனின் ஒளித்தட்டு தொடர்ந்து ஆராயப்பட்டு வந்துள்ளது.  சூரியனில் கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது. ஒருசமயம் கரும்புள்ளிகளே இராது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒருகட்டத்தில் அது உச்சத்தை எட்டும். பின்னர் அதேபோல மறைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் கரும்புள்ளிகளே இராது. பிறகு மறுபடி அவை தோன்ற ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் ஒரு காலக்கணக்கு உள்ளது.  அதாவது கரும்புள்ளிகள் தெரிய ஆரம்பித்து உச்சத்தை எட்டுவதற்கு சுமார் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். பிறகு அவை படிப்படியாகக் குறைந்து புள்ளிகள் மறைவதற்கு அதேபோல ஐந்தரை ஆண்டுகள் பிடிக்கும்.  ஆக மொத்தம், 11 ஆண்டுகள் ஆகும். இது 11 ஆண்டு கரும்புள்ளிக் காலச்சுழற்சி என்று குறிப்பிடப்படுகிறது. சில சமயங்களில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 200 வரை இருக்கலாம். உதாரணமாக, 1954-ம் ஆண்டில் 201 கரும்புள்ளிகள் தென்பட்டன.  கரும்புள்ளிகள் முதலில் சூரியனின் நடுக்கோட்டுக்கு மேலேயும் கீழேயும்தான் தோன்றுகின்றன. பின்னர் சூரியனின் நடுப்பகுதியிலும் இவை தோன்றுகின்றன.
பெயர்தான் கரும்புள்ளியே தவிர, கரும்புள்ளி ஒவ்வொன்றும் பிரம்மாண்டமானது. சிறிய கரும்புள்ளிகூட ஒரு பூமியை உள்ளே இறக்கி விடலாம் என்று சொல்லத்தக்க அளவில் மிகப்பெரியது. உண்மையில் சூரியனின் கரும்புள்ளிகள் கருமையானவை அல்ல. சூரியனின் மேற்புறத்தில் மற்ற இடங்களைவிட வெப்பம் குறைவான பகுதிகளே நமக்குக் கரும்புள்ளிகளாகத் தெரிகின்றன.  சூரியனில் மிக நீண்ட காலம் கரும்புள்ளிகளே தோன்றாமல் போகுமா? கடந்த காலத்தில் நமக்குத் தெரிந்து குறைந்தது நான்கு தடவை அவ்விதம் ஏற்பட்டுள்ளது. கி.பி. 1645 முதல் 1715-ம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை. சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்தவரான எட்வர்ட் மாண்டர் என்ற விஞ்ஞானியைக் கௌரவிக்கும் வகையில் இக் காலகட்டத்துக்கு "மாண்டர் மினிமம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர் கி.பி. 1280 - 1350 காலகட்டத்திலும் கி.பி.1460 - 1550 காலகட்டத்திலும் இவ்வித நிலைமை இருந்தது. மாண்டர் மினிமத்துக்குப் பிறகு கி.பி. 1790 முதல் 1830-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலும் இதேபோல சூரியனில் அனேகமாகக் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.  கரும்புள்ளிகள் நிறைய இருந்தால் என்ன அல்லது இல்லாவிட்டால் என்ன என்று கேட்கலாம். சூரியனில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுமானால் அது பூமியில் நம்மைப் பல வகைகளிலும் பாதிக்கிறது.  சூரியனிலிருந்து இயல்பாக ஆற்றல் மிக்க துகள்கள் (இதைச் சூரியக்காற்று என்றும் சொல்வதுண்டு) வெளிப்பட்டு வருகின்றன. கரும்புள்ளிகள் அதிகமாகத் தோன்றும் காலகட்டத்தில் சூரியனிலிருந்து இவ்விதத் துகள்கள் அதிக அளவில் அதிக வேகத்தில் வெளிப்படுகின்றன.  இவை பூமியை அதாவது மக்களைத் தாக்காதபடி பூமியின் காந்த மண்டலம் தடுத்து விடுகிறது. சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்கும்போது சூரியனில் கடும் சீற்றம் ஏற்படுகிறது. தவிர, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்படுகிறது.  இந்த உருண்டை பூமியின் காந்த மண்டலத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. இதை விண்வெளியிலிருந்து பயங்கர மின்னல் தாக்குவதற்கு ஒப்பானது என்றும் கூறலாம்.  இதன் விளைவாக, நீண்ட தூரம் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் கம்பிகளில் கூடுதல் மின்சாரம் தோன்றி மின்சார டிரான்ஸ்பார்மர்கள் வெடிக்கும். இதனால் பெரிய பிராந்தியத்தில் மின்சப்ளை பாதிக்கப்படும்.  1989-ம் ஆண்டில் கனடாவின் கிழக்குப் பகுதியில் இவ்விதம் மின்சப்ளை பாதிக்கப்பட்டு 6 கோடி மக்கள் பல மணி நேரம் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர். வடகிழக்கு அமெரிக்காவிலும் மற்றும் சுவீடன் நாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டது.  இப்போது அது மாதிரி சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் முகில் தாக்குமானால் பல நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு கோடானுகோடி மக்கள் பாதிக்கப்படுவர். மின்சார சாதனங்களையும் இயந்திரங்களையும் சீர்படுத்த பல ஆண்டுகள் பிடிக்கும். தவிர, சூரியனிலிருந்து வெளிப்படும் ஆபத்தான ஆற்றல் முகில், தொலைபேசித் தொடர்பு உள்பட தகவல் தொடர்பு சாதனங்களையும் பாதிக்கும். தரைக்கு மேலே அமைந்த எண்ணெய்க் குழாய்களையும் இது பாதிக்கும்.  பூமியைச் சுற்றுகிற செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை வேகம் பாதிக்கப்பட்டு அதனால் அவற்றின் ஆயுள் குறையும்.  பூமியைச் சுற்றுகிற விண்வெளி நிலையத்திலிருந்து யாரேனும் வெளியே வந்து அந்தரத்தில் பணியாற்ற நேர்ந்தால் கடும் கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். பூமியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இவ்விதம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
 சூரியனில் கரும்புள்ளிகள் அனேகமாக இல்லாத காலம் முடிந்து புதிய 11 ஆண்டுகால சுழற்சி கடந்த 2008 டிசம்பரில் தொடங்கியது. அப்போதே அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸô 2011 வாக்கில் சூரியனின் ஒளித்தட்டில் 150 முதல் 200 கரும்புள்ளிகள் தென்படலாம் என்று கூறியது. ஆனால், அப்படி நிகழவில்லை.  2011-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வரையிலான புள்ளிவிவரப்படி தொடர்ந்து 820 நாள்களுக்கு சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.  நியாயமாகப் பார்த்தால் 2012-ம் ஆண்டில் சூரியனின் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்ச அளவை எட்ட வேண்டும். ஆனால், அப்படி நிகழும் என்று தோன்றவில்லை. சூரியனின் வழக்கமான போக்கு மாறிவிட்டது போலத் தோன்றுகிறது.  இதில் வேடிக்கை என்னவென்றால் 2012-ம் ஆண்டு வாக்கில் சூரியனில் அதிகபட்சமாகக் கரும்புள்ளிகள் தோன்றும் என்றும், அதன் விளைவாக சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்படும் என்றும், அதையடுத்து பூமிக்கே ஆபத்து ஏற்படும் என்ற கற்பனை அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட் தயாரிப்பாக ஓர் ஆங்கிலப் படம் வெளியானது. இந்தியாவிலும் அது திரையிடப்பட்டது.  உள்ளபடி இப்போது சூரியனில் கரும்புள்ளிகள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. ஆகவே, சூரியனில் சீற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். 2010 ஆகஸ்டிலும் 2011 பிப்ரவரியிலும் சூரியனிலிருந்து ஆற்றல் முகில் வெளிப்பட்டு பூமியை நோக்கி வந்தன என்றாலும் பொதுவில் சூரியன் அமைதியாக இருக்கிறது.  சூரியனின் கரும்புள்ளிகள் விஷயத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து காணப்பட்டு வந்த 11 ஆண்டு காலச் சுழற்சி மறைந்து முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் நிகழ்ந்ததுபோல தொடர்ந்து நீண்ட காலம் சூரியன் அமைதியாக இருந்து வருமோ என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கியுள்ளனர்.  
சூரியனில் அப்படியான அமைதி நிலை ஏற்பட்டால் பூமியில் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்பு ஒன்று உண்டு. அதாவது, பூமியில் குறிப்பாக வட பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை குறையும். முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் ஐரோப்பாவின் வட பகுதியில் அமைந்த நாடுகளில் பல பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டன.  அதுபோல இப்போது பொதுவில் பூமியில் வெப்ப நிலை குறையலாம். ஆனாலும் இது காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்து வருவதால் பூமியின் சராசரி வெப்ப நிலை அதிகரித்து வருகிற பிரச்னையை சரிக்கட்டி விடாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்பட்டு, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்பட்டு, அது பூமியை நோக்கி வந்தால் பூமியில் தகவல் தொடர்பு உள்பட பலவும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறினோம்.  ஆகவே, இவை பற்றி முன்கூட்டி அறிந்து கொள்வதற்காக சூரியனை ஆராயும் பொருட்டு சில ஆளில்லா செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று "ஏசிஇ' என்பதாகும். இது தொடர்ந்து சூரியனை ஆராய்ந்து வருகிறது. சூரியனில் நிகழும் முக்கிய மாற்றங்களை இது ஆராய்ந்து தகவல் அனுப்புகிறது. ஆகவே, நாம் உஷாராகி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போதிய அவகாசம் கிடைக்கிறது.  சூரியனில் நிகழும் மாற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது பற்றி நீண்ட நாள்களாகவே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக பல கொள்கைகளும் கூறப்பட்டுள்ளன. ஆனாலும் நம்மால் இன்னும் சூரியனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.  ஆகவேதான் சூரியனில் கரும்புள்ளி இல்லாத காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நம்மால் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை.
ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. சூரியனின் கரும்புள்ளிகளுக்கும் பூமியின் பருவ நிலைமைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உள்ளது.  விஞ்ஞானிகள் விசேஷ கருவிகளைப் பயன்படுத்தி சூரியனை ஆராய்கிறார்கள். ஆகவே, சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளனவா என்று கண்டறிய ஒருபோதும் சூரியனை வெறும் கண்ணால் பார்க்கலாகாது. அவ்விதம் செய்தால் நிச்சயம் கண் பார்வை போய்விடும்.

சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டம்


5 முறை சுற்றுவட்டப் பாதை மாற்றும் தொகுதி கட்டுப்பாட்டு மூலம், 3ம் நாள் விடியற்காலை, சென் சோ எட்டு மனிதர் செல்லாத விண்கலம், தியன் குங் ஒன்று விண்வெளிக் கலத்துடன் விண்வெளியில் வெற்றிகரமாக இணைந்தது. தற்போது இரண்டு விண்கலன்களும் ஒன்று சுற்றுவட்டப் பாதையில் இயங்குகின்றன. அமெரிக்கா மற்றும் ரஷியாவை அடுத்து, உலகில் விண்கலன்கள் விண்வெளியில் இணையும் நுட்பத்தை கிரகித்துக்கொண்ட 3வது நாடாக சீனா மாறியிருக்கிறது. இது, சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்ட இலட்சியத்தில் புதியக் கட்டத்தை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் விண்கலன்கள் இணைவது என்பது, விண்வெளி சுற்றுவட்ட பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளி கலங்கள், சரியான நேரத்தில் சரியான இடத்தில் சந்தித்து இணைந்து ஒரே விண்வெளி கலமாக மாறி, இயங்குவதை குறிக்கிறது. இதில் 4 சிக்கல்கள் உள்ளன.
ஒன்று, விண்வெளியில் இணையும் விண்வெளி கலங்களின் வேகம் அதிகம். அவை மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். எனவே சரியான கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால், விபத்து நிகழ வாய்ப்புகள் அதிகம்.
இரண்டு, விண்வெளியில் விண்கலன்கள் இணையும் வரை, இரு விண்வெளி கலங்களும், தத்தமது தனிப்பட்ட பாதைகளில் இயங்கி கொண்டிருக்கும். அவ்வாறு புவியை சுற்றி இயங்கி வரும் போது, இரு விண்வெளி கலங்களுக்கிடையிலான தொலைவை படிப்படியாக குறைக்க வேண்டும்.
மூன்று, உயர் நிலை துல்லிய அளவீட்டை செவ்வனே செய்து கட்டுப்படுத்த வேண்டும். இரு விண்வெளி கலங்களின் அளவீட்டு கருவிகள், மிக மிக துல்லியமாக அளவிட வேண்டும். இரு விண்வெளி கலங்களின் பாதைகள் இருக்கும் இடம், தூரம், இயங்கும் வேகம் ஆகியவற்றை வெகுவிரைவாக துல்லியமாக அளவிட வேண்டும். சில முறை மேற்கொள்ளப்படும் பாதை மாற்ற கட்டுப்பாட்டின் மூலம், இரு விண்வெளி கலன்களும் ஒன்றை ஒன்று நோக்கி வர செய்ய வேண்டும்.
நான்கு, சிக்கலான நுட்பங்களுடைய விண்கலங்களின் இணைப்புக் கருவிகளை செவ்வனே உருவாக்க வேண்டும். இணைப்பு தொகுதி கருவிகளில் பத்துக்கு மேற்பட்ட கருவிகள் இருக்கின்றன. அதனால், ஒரு முறை விண்கலங்கள் இணைய பத்துக்கு மேற்பட்ட நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். ஆனால், விண்வெளியில், காற்று இல்லை, மிகவும் குளிர், புவி ஈர்ப்பு ஆற்றல் குறைவு இத்தகைய சூழலில், இந்த நடவடிக்கைகள் மிக கடினமாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த 4 சிக்கல்கள் குறித்து, சீன விண்வெளி பணியாளர்கள், வெளிநாட்டு விண்வெளி நிலையங்களின் விண்கலன்கள் இணைப்பு அனுபவங்களை கற்றுக்கொண்டு, தங்களது முயற்சிகளால், சீனாவின் விண்வெளி கலங்கள் விண்வெளியில் ஒன்றாக இணையும் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.

Sunday, 16 October 2011

"உலக விண்வெளி வாரம்

அபகரிப்பு, ஆபாசம், இழிசொல், ஈனத்தனம், உயிர்க்கொலை, ஊழல், எத்து, ஏமாற்று என்று அரசியலில் புதிய ஆத்திச்சூடி உருவாகிறது. மதக்கலவரங்களும் சாதிச் சண்டைகளும் மாநிலப் பிரிப்புகளும் சுற்றுச்சூழல் பிரச்னைகளும் அண்டை நாட்டு ஊடுருவல்களும் உள்நாட்டில் பரவி நிற்கிற காலகட்டம். அக்டோபர் முதல் நாள் "சர்வதேச முதியோர் தினம்' மறுநாள் காந்திஜி பிறந்த நாள் என்று தொடங்கி 80 வயது நிறையும் மூத்த விஞ்ஞானி ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் பிறந்தநாள் (அக்டோபர் 15) எல்லாம் கொண்டாடப்பட வேண்டியவை. கல்விக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் பண்டிகைகளும் விண்வெளி வார விழாவும் (அக்.4-10) ஒருசேர நடந்தேறி வருகின்றன.

1957 அக்டோபர் 4 அன்று ஸ்புட்னிக் என்ற உலகின் முதலாவது செயற்கைக்கோள் செலுத்தப் பெற்றது. 1967 அக்டோபர் 10 அன்று "புற விண்வெளி அமைதி உடன்படிக்கை' அறிவிப்பு ஆயிற்று. அக்டோபரில் இந்த இரண்டு தினங்களுக்கு இடைப்பட்ட வாரமே "உலக விண்வெளி வாரம்'.
""விண்வெளி அறிவியலையும் தொழில்நுட்பங்களையும் வளங்குன்றா மேம்பாட்டுக்கு அமைதியான வழிமுறைகளில் கையாளுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆட்சியாளர்களுக்கும் குடிமக்களுக்கும் உலக அளவில் பொது நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வதே'' ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கம். இந்த ஆண்டு மனித விண்வெளிப் பயணங்கள் பற்றிய தகவல் பரவலே மையக்கருத்து.
1961 ஏப்ரல் 12 அன்று யூரி ககாரின் என்கிற சோவியத் வீரர் விண்வெளிப் பாதையில் பூமியை ஒரு முறை சுற்றித் திரும்பிய சாகசத்தின் பொன்விழா ஆண்டும்கூட.
இன்றைய தலைமுறையினர்க்கு இத்தகைய அறிவியல் சாதனையாளர்களையும் இடைவிடாது நினைவுபடுத்தியாக வேண்டும். இல்லையெனில் அவர்கள் சினிமாவிலும் சின்னத்திரையிலும் மூழ்கிவிடுவார்கள். இனியேனும் வெறுமனே சின்னத்திரை சீரியல் கண்டு குடும்பத்தில் கலகம் மூட்டாமல் வீராங்கனையர் புகழ் பரப்புவோமே. இந்த ஆண்டு பன்னாட்டு மகளிர் தினம் (மார்ச்-3) முதன்முதலில் (1911) அனுசரிக்கப்பட்டதன் நூற்றாண்டும் அல்லவா?
"வானவூர்தி ஓட்டலாம் பெண்கள்' என்ற பாவேந்தர் சொல் இன்று பலித்துவிட்டது. விமானம் ஓட்டுவதற்கான உரிமம் (1930) பெற்ற ஊர்மிளா கே.பரீக், "டெக்கான் ஏர்வேஸ்' என்னும் முதல் வர்த்தக விமானம் (1947) ஓட்டிய பெருமைக்குரிய பிரேம் மாத்தூர் (1947), சரளா தக்ராள் (1948), உலகின் முதலாவது "ஏர் பஸ்' பெண் விமானி (1966) துர்கா பானர்ஜி, போயிங் 737 ஓட்டிய செüதாமினி தேஷ்முக் (1985), "சேதக்' ஹெலிகாப்டர் ஓட்டிய முதல் இந்திய மகளிர் சிம்ரன் சோதி மற்றும் செரில் தத்தா போன்ற இந்தியப் பெண் விமானியரை மறந்துவிட்டோம்.
உலக விண்வெளி வரலாற்றில் இன்றுவரை 55 பெண்மணிகள் புவியைச் சுற்றித் திரும்பியுள்ளனர். முதலாவது விண்வெளி வீராங்கனை வாலன்டினா வி.தெரஸ்கோவா என்ற ரஷியப் பெண்மணி 1963 ஜூன் 16 அன்று வாஸ்டாக்-5 எனும் விண்கலத்தில் பயணம் செய்தவர். தமது 26-ம் வயதில் 48 தடவை பூமியைச் சுற்றியவர். இத்தனைக்கும் இவர் ஒரு சாதாரண பஞ்சாலைத் தொழிலாளியின் மகள்.
உலகின் இரண்டாவது வீராங்கனையும் ஒரு ரஷியப் பெண்மணிதான். ஸ்வெத்லேனா ஒய்.சவித்ஸ்கயா. இவர் சோயுஸ்-7 (1982) மற்றும் சோயுஸ்-12 (1984) விண்கலங்களில் ஆக இரண்டு முறை விண் பயணம் செய்த முதல் மங்கை. சோயுஸ்-12 விண்கலத்தில் இருந்து அண்டவெளியில் இறங்கி மிதந்த முதல் பெண் சாதனையாளரும்கூட.
அமெரிக்க விண்வெளி வரலாற்றில் முதலாவது வீராங்கனை என்ற சிறப்புக்கு உரியவர் சாலி ஏ.ரைடு. விண்வெளி சென்ற மூன்றாவது பெண்மணி இவரே. தமது 32-வது வயதில் 1983 ஜூன் 18 அன்று அமெரிக்காவின் சாலஞ்சர் விண்வெளி ஓடத்தில் பயணம் செய்தவர். இவரது கணவரும் விண்வெளி வீரரும் ஆன ஸ்டீவன் ஹாவ்லியிடம் கேட்டபோது, ""அவளை மட்டும் விண்பயணத்திற்கு தேர்வு செய்திருக்காவிட்டால் எனக்குப் பைத்தியமே பிடித்திருக்கும்'' என்றாராம். இருவருமே காதல் தம்பதியர் அல்லவா?
விண்வெளி வீரமரணம் அடைந்த பெண்மணிகளுக்கும் அஞ்சலி செலுத்த வேண்டும். 1986 ஜனவரி 28 அன்று சாலஞ்சர் விபத்தில் அமெரிக்க நாட்டு இரண்டாவது விண்வெளி வீராங்கனை ஜுடித் ஏ.ரஸ்னிக், விண்வெளி சென்ற முதலாவது ஆசிரியை கிறிஸ்டா மக் ஆலிஃப் ஆகியோருடன் 2003 பிப்ரவரி முதல் நாளன்று பூமிக்குத் திரும்பும் வழியில் நடுவானில் வெடித்துச் சிதறிய கொலம்பியா விண்வெளி ஓடத்தில் உயிர்த்தியாகம் செய்த நம் நாட்டு முதல் வீராங்கனை கல்பனா சாவ்லா பற்றி எல்லாம் உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
அன்னா லீ ஃபிஷர் எனும் பெண்மணி 1984-ம் ஆண்டு டிஸ்கவரி விண்வெளிப் பயணத்தின்போது அண்டவெளியில் இறங்கி சாகசம் நிகழ்த்தினார். வேறு ஒன்றுமில்லை, அங்கே பழுதாகிச் சுற்றிக் கொண்டிருந்த "பலாப்பா' செயற்கைக்கோளை இயந்திரக் கை உதவியால் பூமிக்கு இழுத்து வந்தார் என்றால் பாருங்களேன். இவர் விண்வெளிக்குச் சென்றபோது ஒரு குழந்தைக்குத் தாய். அதனால் விண்வெளி சென்ற முதல் அன்னை அன்னா லீ ஃபிஷர் என்பதும் முத்திரைத் தகவல். உண்மையில் இல்லறம் சிறக்க குழந்தை பெற்றுக்கொண்ட முதல் விண்வெளி தம்பதியர் மார்க்கரெட் ரியா செட்டான்- ராபர்ட் லீ கிப்சன் ஆகியோர். இந்த அமெரிக்க வீராங்கனை மூன்று முறை விண்வெளி ஓடங்களில் பயணம் செய்தவர். கணவர் போட்டி போட்டுக் கொண்டு ஐந்து முறை விண் சுற்றியவர். தம்பதியருள் அதிகத் தடவை புவி சுற்றிய கணவர் இவர்தான். மனைவி நச்சு தாங்காமல் அடிக்கடி விண்வெளி கிளம்பி விடுகிறாரோ என்று மட்டும் சந்தேகப்பட வேண்டாம்.
அறிவியல் உணர்வுப் பெருக்கினால் வெவ்வேறு நாடுகளின் விண்கலன்களில் பிற நாட்டுப் பெண்மணிகள் நட்புப் பயணம் செய்வதும் உண்டு. ரஷியா, அமெரிக்கா அல்லாத பிற நாட்டு விண்வெளி வீராங்கனையர் வரிசையில் முதலிடம் வகிப்பவர் ஹெலன் பி.ஷர்மான் என்ற இங்கிலாந்துப் பெண்மணி. தமது 28 வயதில் ரஷிய நாட்டு சோயுஸ்-டி.எம்.12 என்னும் விண்கலனில் பயணம் செய்தார். அவ்வாறே, கிளாடி அந்த்ரே தெஷாய்ஸ் என்கிற பிரெஞ்சுப் பெண்மணி (சோயுஸ்-டி.எம்.24) விண்வெளி சென்ற முதல் ஐரோப்பிய மங்கை. இவர் உயிரி வேதியியல் விஞ்ஞானி.
வேற்று இனப் பெண்டிரும் காழ்ப்புணர்வு மறந்து விண்வெளி என்னும் எதார்த்தச் சமத்துவவெளியில் ஒன்றாய் பறந்த வரலாறும் பதிவாகி உள்ளது. 1992-ம் ஆண்டு அமெரிக்க "எண்டவர்' ஓடத்தில் மேயி சி.ஜெமிசன் என்னும் முதல் கறுப்பினப் பெண்மணியும் 1994 ஜூலை மாதம் "கொலம்பியா' ஓடத்தில் கீழை நாட்டின் சியாக்கி முக்கை எனும் ஜப்பானியப் பெண்ணும் விண்வெளி சென்று திரும்பினர். இவர்களில் ஜெமிசன் விண்வெளிப் பயணம் செய்த முதலாவது பெண் மருத்துவரும் கூட.
அவ்வாறே ரஷியாவிற்கும் அமெரிக்காவிற்கும் விண்வெளி நல்லிணக்கத்தின் அடையாளமாக விண்ணூர்தியில் புவி சுற்றி வந்துள்ளனர். ஷானன் டபிள்யு.லூசிட் என்னும் அமெரிக்க வீராங்கனை ரஷிய "மிர்' விண்கலத்திற்குச் சென்று ஆய்வுகள் நடத்தி இருக்கிறார். இவரும் உயிரி வேதியியல் நிபுணர். உலக விண்வெளி வீராங்கனையர் சரித்திரத்தில் நீண்ட காலம் அதாவது -223 நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்த பெண்மணியும் இவரே. அன்றியும் அதிகபட்சமாக ஐந்து தடவை புவி சுற்றிய வீராங்கனை எனும் முத்திரை பதித்த முதல் வீராங்கனை.
முதன் முறையாக வர்த்தக ரீதியில் அமெரிக்காவின் சர்வதேச விண்சுற்று நிலையத்துக்குச் சென்றவர் அனூஷே அன்ஸாரி என்னும் ஈரானியப் பெண்மணி. 2006 செப்டம்பர் 18 அன்று ரஷிய நாட்டு சோயுஸ் டி.எம்.ஏ.9 விண்ணூர்த்திக்கு அவர் செலுத்திய கட்டணம் 2 கோடி டாலருக்கும் அதிகம். விண்வெளிக்குச் சென்ற முதலாவது இசுலாமியப் பெண்மணி. இதனாலேயே சில விமர்சனங்களுக்கும் ஆளானார்.
இந்திய வம்சாவளியைச் சார்ந்த மற்றொரு விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பற்றி தெரியாதவர் யாருமே இருக்க முடியாது. 2007 செப்டம்பர் இறுதியில் ஒரு வார காலம் இந்தியாவிற்கு வந்திருந்தாரே. சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட நாட்கள் தங்கிய சாதனையாளர். 195 நாட்கள் என்றால் சும்மாவா? இதற்கு மத்தியில் ஏறத்தாழ 29 மணி நேரம் 17 நிமிடங்கள் அண்டவெளியில் இறங்கிப் புற வாகனச் செயல்பாட்டிலும் ஈடுபட்டாராமே.
இவ்விதம் நாடு, மதம், சாதி, மொழி, இனம், நிறம் ஆகிய புறப் பாகுபேத எல்லைகளைக் கடந்த ஒரே சமத்துவ பூமி விண்வெளி அல்லவா? அதனால்தான் பாரதியின் "புதிய கோணங்கி' மாதிரி ""சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது; மந்திரம் பெருகுது; தந்திரம் வளருது'' என்று பாடத் தோன்றுகிறது.

Monday, 22 August 2011

சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு ! சூரிய புயல் திடீர் என வருமா?

                                                                                                                                நன்றி தினமணி
சுமார் ஐந்தரை ஆண்டுகள் அமைதியின் சொரூபம். பின்னர் ஐந்தரை ஆண்டுகள் ஆக்ரோஷத் தாண்டவம். பொதுவில் சூரியனில் இதுதான் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  இப்போது சூரியன் ஆக்ரோஷத்தைக் காட்டவேண்டிய காலம். ஆனால், அமைதியாக இருக்கிறது. இது ஏன் என்பதுதான் விளங்கவில்லை. 
விஞ்ஞானிகள் திகைத்து நிற்கின்றனர்.  கண்ணைக் கூச வைக்கிற அளவுக்கு மிகப் பிரகாசமான ஒளித்தட்டாக சூரியன் காட்சி அளிக்கிறது. ஆனாலும் குழந்தைகளுக்கு முகத்தில் வைக்கும் திருஷ்டிப் பொட்டுபோல, சூரியனின் மேற்புறத்தில் அவ்வப்போது கரும்புள்ளிகள் தென்படுகின்றன. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட விஷயம்.  இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ 1612-ம் ஆண்டில் தமது சிறிய தொலைநோக்கி மூலம் சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்து வரைபடமே தயாரித்தார். கட்டுரைகளையும் எழுதினார். கிட்டத்தட்ட அப்போதிலிருந்தே சூரியனின் ஒளித்தட்டு தொடர்ந்து ஆராயப்பட்டு வந்துள்ளது.
 சூரியனில் கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது. ஒருசமயம் கரும்புள்ளிகளே இராது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒருகட்டத்தில் அது உச்சத்தை எட்டும். பின்னர் அதேபோல மறைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் கரும்புள்ளிகளே இராது. பிறகு மறுபடி அவை தோன்ற ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் ஒரு காலக்கணக்கு உள்ளது.  அதாவது கரும்புள்ளிகள் தெரிய ஆரம்பித்து உச்சத்தை எட்டுவதற்கு சுமார் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். பிறகு அவை படிப்படியாகக் குறைந்து புள்ளிகள் மறைவதற்கு அதேபோல ஐந்தரை ஆண்டுகள் பிடிக்கும்.  ஆக மொத்தம், 11 ஆண்டுகள் ஆகும். இது 11 ஆண்டு கரும்புள்ளிக் காலச்சுழற்சி என்று குறிப்பிடப்படுகிறது. சில சமயங்களில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 200 வரை இருக்கலாம். உதாரணமாக, 1954-ம் ஆண்டில் 201 கரும்புள்ளிகள் தென்பட்டன.  கரும்புள்ளிகள் முதலில் சூரியனின் நடுக்கோட்டுக்கு மேலேயும் கீழேயும்தான் தோன்றுகின்றன. பின்னர் சூரியனின் நடுப்பகுதியிலும் இவை தோன்றுகின்றன. பெயர்தான் கரும்புள்ளியே தவிர, கரும்புள்ளி ஒவ்வொன்றும் பிரம்மாண்டமானது. சிறிய கரும்புள்ளிகூட ஒரு பூமியை உள்ளே இறக்கி விடலாம் என்று சொல்லத்தக்க அளவில் மிகப்பெரியது. உண்மையில் சூரியனின் கரும்புள்ளிகள் கருமையானவை அல்ல. சூரியனின் மேற்புறத்தில் மற்ற இடங்களைவிட வெப்பம் குறைவான பகுதிகளே நமக்குக் கரும்புள்ளிகளாகத் தெரிகின்றன.
 சூரியனில் மிக நீண்ட காலம் கரும்புள்ளிகளே தோன்றாமல் போகுமா? கடந்த காலத்தில் நமக்குத் தெரிந்து குறைந்தது நான்கு தடவை அவ்விதம் ஏற்பட்டுள்ளது. கி.பி. 1645 முதல் 1715-ம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை. சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்தவரான எட்வர்ட் மாண்டர் என்ற விஞ்ஞானியைக் கௌரவிக்கும் வகையில் இக் காலகட்டத்துக்கு "மாண்டர் மினிமம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர் கி.பி. 1280 - 1350 காலகட்டத்திலும் கி.பி.1460 - 1550 காலகட்டத்திலும் இவ்வித நிலைமை இருந்தது. மாண்டர் மினிமத்துக்குப் பிறகு கி.பி. 1790 முதல் 1830-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலும் இதேபோல சூரியனில் அனேகமாகக் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.  கரும்புள்ளிகள் நிறைய இருந்தால் என்ன அல்லது இல்லாவிட்டால் என்ன என்று கேட்கலாம். சூரியனில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுமானால் அது பூமியில் நம்மைப் பல வகைகளிலும் பாதிக்கிறது.  சூரியனிலிருந்து இயல்பாக ஆற்றல் மிக்க துகள்கள் (இதைச் சூரியக்காற்று என்றும் சொல்வதுண்டு) வெளிப்பட்டு வருகின்றன. கரும்புள்ளிகள் அதிகமாகத் தோன்றும் காலகட்டத்தில் சூரியனிலிருந்து இவ்விதத் துகள்கள் அதிக அளவில் அதிக வேகத்தில் வெளிப்படுகின்றன.  இவை பூமியை அதாவது மக்களைத் தாக்காதபடி பூமியின் காந்த மண்டலம் தடுத்து விடுகிறது. சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்கும்போது சூரியனில் கடும் சீற்றம் ஏற்படுகிறது. தவிர, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்படுகிறது.  இந்த உருண்டை பூமியின் காந்த மண்டலத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. இதை விண்வெளியிலிருந்து பயங்கர மின்னல் தாக்குவதற்கு ஒப்பானது என்றும் கூறலாம்.  இதன் விளைவாக, நீண்ட தூரம் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் கம்பிகளில் கூடுதல் மின்சாரம் தோன்றி மின்சார டிரான்ஸ்பார்மர்கள் வெடிக்கும். இதனால் பெரிய பிராந்தியத்தில் மின்சப்ளை பாதிக்கப்படும்.
 1989-ம் ஆண்டில் கனடாவின் கிழக்குப் பகுதியில் இவ்விதம் மின்சப்ளை பாதிக்கப்பட்டு 6 கோடி மக்கள் பல மணி நேரம் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர். வடகிழக்கு அமெரிக்காவிலும் மற்றும் சுவீடன் நாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டது.  இப்போது அது மாதிரி சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் முகில் தாக்குமானால் பல நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு கோடானுகோடி மக்கள் பாதிக்கப்படுவர். மின்சார சாதனங்களையும் இயந்திரங்களையும் சீர்படுத்த பல ஆண்டுகள் பிடிக்கும். தவிர, சூரியனிலிருந்து வெளிப்படும் ஆபத்தான ஆற்றல் முகில், தொலைபேசித் தொடர்பு உள்பட தகவல் தொடர்பு சாதனங்களையும் பாதிக்கும். தரைக்கு மேலே அமைந்த எண்ணெய்க் குழாய்களையும் இது பாதிக்கும்.  பூமியைச் சுற்றுகிற செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை வேகம் பாதிக்கப்பட்டு அதனால் அவற்றின் ஆயுள் குறையும்.  பூமியைச் சுற்றுகிற விண்வெளி நிலையத்திலிருந்து யாரேனும் வெளியே வந்து அந்தரத்தில் பணியாற்ற நேர்ந்தால் கடும் கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். பூமியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இவ்விதம் அடுக்கிக் கொண்டே போகலாம்.  சூரியனில் கரும்புள்ளிகள் அனேகமாக இல்லாத காலம் முடிந்து புதிய 11 ஆண்டுகால சுழற்சி கடந்த 2008 டிசம்பரில் தொடங்கியது. அப்போதே அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸô 2011 வாக்கில் சூரியனின் ஒளித்தட்டில் 150 முதல் 200 கரும்புள்ளிகள் தென்படலாம் என்று கூறியது. ஆனால், அப்படி நிகழவில்லை.  2011-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வரையிலான புள்ளிவிவரப்படி தொடர்ந்து 820 நாள்களுக்கு சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.  நியாயமாகப் பார்த்தால் 2012-ம் ஆண்டில் சூரியனின் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்ச அளவை எட்ட வேண்டும். ஆனால், அப்படி நிகழும் என்று தோன்றவில்லை. 
சூரியனின் வழக்கமான போக்கு மாறிவிட்டது போலத் தோன்றுகிறது.  இதில் வேடிக்கை என்னவென்றால் 2012-ம் ஆண்டு வாக்கில் சூரியனில் அதிகபட்சமாகக் கரும்புள்ளிகள் தோன்றும் என்றும், அதன் விளைவாக சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்படும் என்றும், அதையடுத்து பூமிக்கே ஆபத்து ஏற்படும் என்ற கற்பனை அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட் தயாரிப்பாக ஓர் ஆங்கிலப் படம் வெளியானது. இந்தியாவிலும் அது திரையிடப்பட்டது.  உள்ளபடி இப்போது சூரியனில் கரும்புள்ளிகள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. ஆகவே, சூரியனில் சீற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். 2010 ஆகஸ்டிலும் 2011 பிப்ரவரியிலும் சூரியனிலிருந்து ஆற்றல் முகில் வெளிப்பட்டு பூமியை நோக்கி வந்தன என்றாலும் பொதுவில் சூரியன் அமைதியாக இருக்கிறது.  சூரியனின் கரும்புள்ளிகள் விஷயத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து காணப்பட்டு வந்த 11 ஆண்டு காலச் சுழற்சி மறைந்து முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் நிகழ்ந்ததுபோல தொடர்ந்து நீண்ட காலம் சூரியன் அமைதியாக இருந்து வருமோ என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கியுள்ளனர்.  சூரியனில் அப்படியான அமைதி நிலை ஏற்பட்டால் பூமியில் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்பு ஒன்று உண்டு. அதாவது, பூமியில் குறிப்பாக வட பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை குறையும். முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் ஐரோப்பாவின் வட பகுதியில் அமைந்த நாடுகளில் பல பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டன.  அதுபோல இப்போது பொதுவில் பூமியில் வெப்ப நிலை குறையலாம். ஆனாலும் இது காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்து வருவதால் பூமியின் சராசரி வெப்ப நிலை அதிகரித்து வருகிற பிரச்னையை சரிக்கட்டி விடாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்பட்டு, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்பட்டு, அது பூமியை நோக்கி வந்தால் பூமியில் தகவல் தொடர்பு உள்பட பலவும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறினோம்.  ஆகவே, இவை பற்றி முன்கூட்டி அறிந்து கொள்வதற்காக சூரியனை ஆராயும் பொருட்டு சில ஆளில்லா செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று "ஏசிஇ' என்பதாகும். இது தொடர்ந்து சூரியனை ஆராய்ந்து வருகிறது. சூரியனில் நிகழும் முக்கிய மாற்றங்களை இது ஆராய்ந்து தகவல் அனுப்புகிறது. ஆகவே, நாம் உஷாராகி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போதிய அவகாசம் கிடைக்கிறது.  சூரியனில் நிகழும் மாற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது பற்றி நீண்ட நாள்களாகவே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக பல கொள்கைகளும் கூறப்பட்டுள்ளன. ஆனாலும் நம்மால் இன்னும் சூரியனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.  ஆகவேதான் சூரியனில் கரும்புள்ளி இல்லாத காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நம்மால் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. சூரியனின் கரும்புள்ளிகளுக்கும் பூமியின் பருவ நிலைமைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உள்ளது.
விஞ்ஞானிகள் விசேஷ கருவிகளைப் பயன்படுத்தி சூரியனை ஆராய்கிறார்கள். ஆகவே, சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளனவா என்று கண்டறிய ஒருபோதும் சூரியனை வெறும் கண்ணால் பார்க்கலாகாது. அவ்விதம் செய்தால் நிச்சயம் கண் பார்வை போய்விடும்.  மார் ஐந்தரை ஆண்டுகள் அமைதியின் சொரூபம். பின்னர் ஐந்தரை ஆண்டுகள் ஆக்ரோஷத் தாண்டவம். பொதுவில் சூரியனில் இதுதான் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  இப்போது சூரியன் ஆக்ரோஷத்தைக் காட்டவேண்டிய காலம். ஆனால், அமைதியாக இருக்கிறது. இது ஏன் என்பதுதான் விளங்கவில்லை. விஞ்ஞானிகள் திகைத்து நிற்கின்றனர்.  கண்ணைக் கூச வைக்கிற அளவுக்கு மிகப் பிரகாசமான ஒளித்தட்டாக சூரியன் காட்சி அளிக்கிறது. ஆனாலும் குழந்தைகளுக்கு முகத்தில் வைக்கும் திருஷ்டிப் பொட்டுபோல, சூரியனின் மேற்புறத்தில் அவ்வப்போது கரும்புள்ளிகள் தென்படுகின்றன. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட விஷயம்.  இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ 1612-ம் ஆண்டில் தமது சிறிய தொலைநோக்கி மூலம் சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்து வரைபடமே தயாரித்தார். கட்டுரைகளையும் எழுதினார். கிட்டத்தட்ட அப்போதிலிருந்தே சூரியனின் ஒளித்தட்டு தொடர்ந்து ஆராயப்பட்டு வந்துள்ளது.  சூரியனில் கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது. ஒருசமயம் கரும்புள்ளிகளே இராது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒருகட்டத்தில் அது உச்சத்தை எட்டும். பின்னர் அதேபோல மறைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் கரும்புள்ளிகளே இராது. பிறகு மறுபடி அவை தோன்ற ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் ஒரு காலக்கணக்கு உள்ளது.  அதாவது கரும்புள்ளிகள் தெரிய ஆரம்பித்து உச்சத்தை எட்டுவதற்கு சுமார் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். பிறகு அவை படிப்படியாகக் குறைந்து புள்ளிகள் மறைவதற்கு அதேபோல ஐந்தரை ஆண்டுகள் பிடிக்கும்.  ஆக மொத்தம், 11 ஆண்டுகள் ஆகும். இது 11 ஆண்டு கரும்புள்ளிக் காலச்சுழற்சி என்று குறிப்பிடப்படுகிறது. சில சமயங்களில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 200 வரை இருக்கலாம். உதாரணமாக, 1954-ம் ஆண்டில் 201 கரும்புள்ளிகள் தென்பட்டன.  கரும்புள்ளிகள் முதலில் சூரியனின் நடுக்கோட்டுக்கு மேலேயும் கீழேயும்தான் தோன்றுகின்றன. பின்னர் சூரியனின் நடுப்பகுதியிலும் இவை தோன்றுகின்றன.
பெயர்தான் கரும்புள்ளியே தவிர, கரும்புள்ளி ஒவ்வொன்றும் பிரம்மாண்டமானது. சிறிய கரும்புள்ளிகூட ஒரு பூமியை உள்ளே இறக்கி விடலாம் என்று சொல்லத்தக்க அளவில் மிகப்பெரியது. உண்மையில் சூரியனின் கரும்புள்ளிகள் கருமையானவை அல்ல. சூரியனின் மேற்புறத்தில் மற்ற இடங்களைவிட வெப்பம் குறைவான பகுதிகளே நமக்குக் கரும்புள்ளிகளாகத் தெரிகின்றன.  சூரியனில் மிக நீண்ட காலம் கரும்புள்ளிகளே தோன்றாமல் போகுமா? கடந்த காலத்தில் நமக்குத் தெரிந்து குறைந்தது நான்கு தடவை அவ்விதம் ஏற்பட்டுள்ளது. கி.பி. 1645 முதல் 1715-ம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை. சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்தவரான எட்வர்ட் மாண்டர் என்ற விஞ்ஞானியைக் கௌரவிக்கும் வகையில் இக் காலகட்டத்துக்கு "மாண்டர் மினிமம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர் கி.பி. 1280 - 1350 காலகட்டத்திலும் கி.பி.1460 - 1550 காலகட்டத்திலும் இவ்வித நிலைமை இருந்தது. மாண்டர் மினிமத்துக்குப் பிறகு கி.பி. 1790 முதல் 1830-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலும் இதேபோல சூரியனில் அனேகமாகக் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.  கரும்புள்ளிகள் நிறைய இருந்தால் என்ன அல்லது இல்லாவிட்டால் என்ன என்று கேட்கலாம். சூரியனில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுமானால் அது பூமியில் நம்மைப் பல வகைகளிலும் பாதிக்கிறது.  சூரியனிலிருந்து இயல்பாக ஆற்றல் மிக்க துகள்கள் (இதைச் சூரியக்காற்று என்றும் சொல்வதுண்டு) வெளிப்பட்டு வருகின்றன. கரும்புள்ளிகள் அதிகமாகத் தோன்றும் காலகட்டத்தில் சூரியனிலிருந்து இவ்விதத் துகள்கள் அதிக அளவில் அதிக வேகத்தில் வெளிப்படுகின்றன.  இவை பூமியை அதாவது மக்களைத் தாக்காதபடி பூமியின் காந்த மண்டலம் தடுத்து விடுகிறது. சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்கும்போது சூரியனில் கடும் சீற்றம் ஏற்படுகிறது. தவிர, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்படுகிறது.  இந்த உருண்டை பூமியின் காந்த மண்டலத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. இதை விண்வெளியிலிருந்து பயங்கர மின்னல் தாக்குவதற்கு ஒப்பானது என்றும் கூறலாம்.  இதன் விளைவாக, நீண்ட தூரம் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் கம்பிகளில் கூடுதல் மின்சாரம் தோன்றி மின்சார டிரான்ஸ்பார்மர்கள் வெடிக்கும். இதனால் பெரிய பிராந்தியத்தில் மின்சப்ளை பாதிக்கப்படும்.  1989-ம் ஆண்டில் கனடாவின் கிழக்குப் பகுதியில் இவ்விதம் மின்சப்ளை பாதிக்கப்பட்டு 6 கோடி மக்கள் பல மணி நேரம் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர். வடகிழக்கு அமெரிக்காவிலும் மற்றும் சுவீடன் நாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டது.  இப்போது அது மாதிரி சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் முகில் தாக்குமானால் பல நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு கோடானுகோடி மக்கள் பாதிக்கப்படுவர். மின்சார சாதனங்களையும் இயந்திரங்களையும் சீர்படுத்த பல ஆண்டுகள் பிடிக்கும். தவிர, சூரியனிலிருந்து வெளிப்படும் ஆபத்தான ஆற்றல் முகில், தொலைபேசித் தொடர்பு உள்பட தகவல் தொடர்பு சாதனங்களையும் பாதிக்கும். தரைக்கு மேலே அமைந்த எண்ணெய்க் குழாய்களையும் இது பாதிக்கும்.  பூமியைச் சுற்றுகிற செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை வேகம் பாதிக்கப்பட்டு அதனால் அவற்றின் ஆயுள் குறையும்.  பூமியைச் சுற்றுகிற விண்வெளி நிலையத்திலிருந்து யாரேனும் வெளியே வந்து அந்தரத்தில் பணியாற்ற நேர்ந்தால் கடும் கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். பூமியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இவ்விதம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
 சூரியனில் கரும்புள்ளிகள் அனேகமாக இல்லாத காலம் முடிந்து புதிய 11 ஆண்டுகால சுழற்சி கடந்த 2008 டிசம்பரில் தொடங்கியது. அப்போதே அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸô 2011 வாக்கில் சூரியனின் ஒளித்தட்டில் 150 முதல் 200 கரும்புள்ளிகள் தென்படலாம் என்று கூறியது. ஆனால், அப்படி நிகழவில்லை.  2011-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வரையிலான புள்ளிவிவரப்படி தொடர்ந்து 820 நாள்களுக்கு சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.  நியாயமாகப் பார்த்தால் 2012-ம் ஆண்டில் சூரியனின் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்ச அளவை எட்ட வேண்டும். ஆனால், அப்படி நிகழும் என்று தோன்றவில்லை. சூரியனின் வழக்கமான போக்கு மாறிவிட்டது போலத் தோன்றுகிறது.  இதில் வேடிக்கை என்னவென்றால் 2012-ம் ஆண்டு வாக்கில் சூரியனில் அதிகபட்சமாகக் கரும்புள்ளிகள் தோன்றும் என்றும், அதன் விளைவாக சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்படும் என்றும், அதையடுத்து பூமிக்கே ஆபத்து ஏற்படும் என்ற கற்பனை அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட் தயாரிப்பாக ஓர் ஆங்கிலப் படம் வெளியானது. இந்தியாவிலும் அது திரையிடப்பட்டது.  உள்ளபடி இப்போது சூரியனில் கரும்புள்ளிகள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. ஆகவே, சூரியனில் சீற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். 2010 ஆகஸ்டிலும் 2011 பிப்ரவரியிலும் சூரியனிலிருந்து ஆற்றல் முகில் வெளிப்பட்டு பூமியை நோக்கி வந்தன என்றாலும் பொதுவில் சூரியன் அமைதியாக இருக்கிறது.  சூரியனின் கரும்புள்ளிகள் விஷயத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து காணப்பட்டு வந்த 11 ஆண்டு காலச் சுழற்சி மறைந்து முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் நிகழ்ந்ததுபோல தொடர்ந்து நீண்ட காலம் சூரியன் அமைதியாக இருந்து வருமோ என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கியுள்ளனர்.  
சூரியனில் அப்படியான அமைதி நிலை ஏற்பட்டால் பூமியில் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்பு ஒன்று உண்டு. அதாவது, பூமியில் குறிப்பாக வட பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை குறையும். முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் ஐரோப்பாவின் வட பகுதியில் அமைந்த நாடுகளில் பல பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டன.  அதுபோல இப்போது பொதுவில் பூமியில் வெப்ப நிலை குறையலாம். ஆனாலும் இது காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்து வருவதால் பூமியின் சராசரி வெப்ப நிலை அதிகரித்து வருகிற பிரச்னையை சரிக்கட்டி விடாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்பட்டு, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்பட்டு, அது பூமியை நோக்கி வந்தால் பூமியில் தகவல் தொடர்பு உள்பட பலவும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறினோம்.  ஆகவே, இவை பற்றி முன்கூட்டி அறிந்து கொள்வதற்காக சூரியனை ஆராயும் பொருட்டு சில ஆளில்லா செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று "ஏசிஇ' என்பதாகும். இது தொடர்ந்து சூரியனை ஆராய்ந்து வருகிறது. சூரியனில் நிகழும் முக்கிய மாற்றங்களை இது ஆராய்ந்து தகவல் அனுப்புகிறது. ஆகவே, நாம் உஷாராகி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போதிய அவகாசம் கிடைக்கிறது.  சூரியனில் நிகழும் மாற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது பற்றி நீண்ட நாள்களாகவே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக பல கொள்கைகளும் கூறப்பட்டுள்ளன. ஆனாலும் நம்மால் இன்னும் சூரியனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.  ஆகவேதான் சூரியனில் கரும்புள்ளி இல்லாத காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நம்மால் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை.
ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. சூரியனின் கரும்புள்ளிகளுக்கும் பூமியின் பருவ நிலைமைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உள்ளது.  விஞ்ஞானிகள் விசேஷ கருவிகளைப் பயன்படுத்தி சூரியனை ஆராய்கிறார்கள். ஆகவே, சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளனவா என்று கண்டறிய ஒருபோதும் சூரியனை வெறும் கண்ணால் பார்க்கலாகாது. அவ்விதம் செய்தால் நிச்சயம் கண் பார்வை போய்விடும்.

Saturday, 13 August 2011

விண்வெளியல் தொடரும் சகாப்தம்

விண்வெளியல் தொடரும் சகாப்தம். ( நன்றி தினமணி )

விண்வெளிக்குச் செல்ல எது வசதி? ஷேர் ஆட்டோவில் நெருக்கியடித்து உட்கார்ந்து போவதுபோல ஒரு கூட்டுக்குள் அடைந்து கிடந்தபடி செல்வதா அல்லது விமானத்தில் உட்கார்ந்து செல்வதுபோல வசதியாக அமர்ந்து செல்வதா? எல்லோரும் இரண்டாவதாகச் சொன்னதுதான் சரி என்று கூறுவார்கள்.
முதலாவதாகச் சொல்லப்பட்ட முறையை ரஷியா ஆரம்ப காலத்திலிருந்து இன்றளவும் பின்பற்றி வருகிறது. அமெரிக்காவோ இரண்டாவதாகச் சொல்லப்பட்ட முறையைப் பின்பற்றி விமானம் போன்ற விண்வெளி வாகனத்தை உருவாக்கி 30 ஆண்டுகாலம் அதைப் பயன்படுத்தி வந்தது. விண்வெளி ஓடம் என்றும் ஆங்கிலத்தில் ஷட்டில் என்றும் அழைக்கப்பட்ட அந்த வாகனம் வசதியாகத்தான் இருந்தது.
அமெரிக்கா மொத்தம் ஆறு விண்வெளி ஓடங்களைத் தயாரித்தது. அவற்றில் ஐந்துதான் மாறி மாறி விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்றன. இவற்றில் இரண்டு விபத்துக்குள்ளாகி அழிந்தன. மீதி மூன்றும் இப்போது அருங்காட்சியகத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டன.
காரணம், இவை மூன்றும் மிகவும் பழசாகி விட்டன. அட்லாண்டிஸ் என்னும் பெயர் கொண்ட விண்வெளி ஓடம் உயரே சென்றுவிட்டு ஜூலை 21-ம் தேதி பூமிக்குத் திரும்பியதும் விண்வெளி ஓடங்களின் சகாப்தம் முடிவடைந்தது.
விண்வெளி ஓடங்கள் ஓய்வு பெற்றதன் விளைவாக, அமெரிக்க விண்வெளி வீரர்களை உயரே அனுப்ப இப்போது அமெரிக்காவிடம் விண்கலம் எதுவும் இல்லை. வேறு வழியின்றி அமெரிக்கா இப்போது ரஷியாவை நம்பி நிற்கிறது. அமெரிக்கா மாற்று ஏற்பாடு செய்கிறவரையில் அதாவது இன்னும் சில ஆண்டுகளுக்கு அமெரிக்க விண்வெளி வீரர்கள் ரஷிய விண்கலம் மூலம்தான் விண்வெளிக்குச் சென்று திரும்புவர்.
கடந்த காலத்தில் இது சில தடவை நடந்துள்ளது. இதற்கு ரஷியாவுக்கு அமெரிக்கா கட்டணம் செலுத்துகிறது. அண்மையில் இக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
ஒருகாலத்தில் விண்வெளி வீரர்களை உயரே அனுப்ப ஏன் சந்திரனுக்கும் அனுப்ப அமெரிக்காவிடம் ராட்சத ராக்கெட்டுகளும் நம்பகமான விண்கலங்களும் இருந்த நிலைமைபோய் இப்போது பிற நாட்டை அதாவது ரஷியாவை நம்பியிருக்கும் நிலைமை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசு எடுத்த சில கொள்கை முடிவுகளும் இந்த நிலைமைக்குக் காரணம்.
மனிதனின் விண்வெளிப் பயணம் 1961-ம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில் ரஷியாவின் யூரி ககாரின் பல அடுக்கு ராக்கெட் ஒன்றின் உச்சியில் பொருத்தப்பட்ட விண்கலம் ஒன்றில் அமர்ந்தபடி உயரே சென்று பூமியைச் சுற்றி விட்டுத் திரும்பினார்.
விண்வெளிக்குச் செல்ல மிக நீண்ட காலமாக அமெரிக்காவும் ரஷியாவும் இவ்விதம் ராக்கெட் முறையைத்தான் பின்பற்றி வந்தன. ரஷியா தனது விண்வெளி வீரர்களுக்காக உருவாக்கிய சோயுஸ் எனப்படும் விண்கலத்தில் கடந்த பல ஆண்டுகளில் நிறைய முன்னேற்றங்களைச் செய்துள்ளது. சோயுஸ் விண்கலத்தை ராக்கெட் மூலம் உயரே செல்லும் முறையைத்தான் ரஷியா இன்னமும் பின்பற்றி வருகிறது.
கடந்த சுமார் 40 ஆண்டுகளாக சோயுஸ் விண்கலங்கள் பிரச்னை இன்றி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. சுமார் 300 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷிய மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் அவவப்போது இந்த சோயுஸ் விண்கலம் மூலம்தான் சென்று வருவர்.
அமெரிக்காவும் சரி, ஆரம்பத்தில் விண்வெளி வீரர்களை உயரே அனுப்ப மெர்க்குரி, ஜெமினி, அப்போலோ ஆகிய விண்கலங்களைப் பயன்படுத்தியது. இவை ராக்கெட் மூலமே உயரே செலுத்தப்பட்டன. சந்திரனுக்கு அமெரிக்க விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்போலோ விண்கலம் ராக்கெட் மூலம்தான் உயரே செலுத்தப்பட்டது.
ஆனால், ராக்கெட்டைப் பயன்படுத்துவதில் ஒரு பிரச்னை உண்டு. விண்கலத்தைச் சுமந்து செல்லும் ராக்கெட் உயரே செல்லும்போது ராக்கெட்டின் ஒவ்வோர் அடுக்கும் எரிந்து முடிந்ததும் கழன்று கீழே விழுந்துவிடும்.
கடைசியில், விண்கலம் ஒன்று மட்டும்தான் முழுதாக விண்வெளிக்குப் போய்ச்சேரும். விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும் கட்டத்தில் அந்த விண்கலத்தில் சில பகுதிகள் கழற்றிவிடப்பட்டு விண்வெளி வீரர்கள் நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்துள்ள சிறிய கோளம் மட்டும்தான் பூமியில் வந்து விழும்.
பல நூறு டன் எடை கொண்ட ராட்சத ராக்கெட் பெரும் உறுமலுடன் உயரே செல்கிறது என்றால் கடைசியில் வெறும் மூன்று டன் எடை கொண்ட கோளம் மட்டுமே பூமிக்குத் திரும்புகிறது.
அக் கோளம் பாரசூட்டுடன் இணைக்கப்பட்டதாகக் கீழே இறங்கினாலும் இறுதியில் தரையில் பொத்தென்று வந்து விழுகிறது. அந்தக் கோளத்தை மறுபடி பயன்படுத்த முடியாது. ஆகவே, ஒவ்வொரு தடவையும் புதிதாக ராக்கெட்டையும் விண்கலத்தையும் தயாரித்தாக வேண்டும்.
ஆகவேதான் மீண்டும் மீண்டும் பயன்படுத்தத்தக்க விண்வெளி வாகனத்தை அமெரிக்கா 1970-களின் பிற்பகுதியில் உருவாக்கியது. இதுவே விண்வெளி ஷட்டில் ஆகும். இது முழுதாக உயரே சென்றுவிட்டு முழுதாக பூமிக்குத் திரும்பியது. அசப்பில் பார்த்தால் இது விமானம்போலத் தோற்றம் அளிக்கும். ஆனாலும் இது விமானம் அல்ல.
ஷட்டில் வாகனத்தின் வெளிப்புறத்தில் மூன்று எரிபொருள் டாங்கிகள் உண்டு. ஷட்டில் சுமார் 300 கிலோ மீட்டர் உயரத்துக்குச் சென்று பூமியைச் சுற்றும் பாதையை அடைவதற்கு இந்த மூன்று டாங்கிகளிலும் உள்ள எரிபொருள் உதவியது.
இந்த மூன்று டாங்கிகளும் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து கழன்று விழுந்தன. இவற்றில் ஒன்றை மட்டும் கடலிலிருந்து மீட்டு அதை மறுபடி பயன்படுத்தி வந்தனர்.
ஷட்டில் வாகனம் பூமியைப் பல தடவை சுற்றித் தனது பணியை முடித்த பின்னர் அல்லது சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்து செயலாற்றி முடிந்த பின்னர் பூமிக்குத் திரும்புகையில் கிளைடர் விமானம்போல செயல்பட்டு மெதுவாகத் தரை இறங்கும்.
சுருங்கச்சொன்னால், விண்வெளி ஷட்டில் மூலம் உயரே சென்று விட்டுத் திரும்புவது என்பது ஓரளவில் சொகுசுப் பயணமே. ஒரு தடவை சென்றுவிட்டு வந்த விண்வெளி ஷட்டிலை நன்கு செப்பனிட்டு மீண்டும் பயன்படுத்த முடியும்.
இந்த ஜூலையில் அட்லாண்டிஸ் விண்வெளி ஷட்டில் உயரே சென்று வந்ததையும் சேர்த்தால் அமெரிக்க விண்வெளி ஷட்டில்கள அனைத்தும் மொத்தம் 135 தடவை விண்வெளிக்குச் சென்று வந்துள்ளன.
அமெரிக்காவின் ஆறு விண்வெளி ஓடங்களில் சேலஞ்சர் விண்வெளி ஓடம் 1986-ம் ஆண்டில் உயரே கிளம்புகையில் வெடித்துச் சிதறியது. அதில் இருந்த ஏழு விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர்.
2003 பிப்ரவரியில் கொலம்பியா என்னும் பெயர் கொண்ட ஷட்டில் வாகனம் தரை இறங்குவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்னர் நடுவானில் வெடித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா உள்பட ஏழு அமெரிக்க விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர். அப்போதே ஷட்டில் வாகனங்கள் இனி லாயக்கில்லை என்பது அனேகமாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
எனினும், அமெரிக்காவின் ஷட்டில் வாகனங்கள் கடந்த 30 ஆண்டுகளில் பல சாதனைகளைப் புரிந்துள்ளன. சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான எடைமிக்க பகுதிகள் ஷட்டில்கள் மூலமே உயரே எடுத்துச் செல்லப்பட்டன.
கிரகங்களை ஆராய்வதற்கான பல ஆளில்லா விண்கலங்கள் ஷட்டில்கள் மூலமே செலுத்தப்பட்டன. ஆனால், ஷட்டில்கள் பற்றிப் பல புகார்களும் உண்டு. ஷட்டில் பணம் விழுங்கி என்பது பிரதானப் புகாராகும்.
ஷட்டில் உருவாக்கப்பட்டபோது இந்த வாகனமானது விண்வெளிக்கு அடிக்கடி எளிதில் செல்ல உதவும் என்றும் குறைந்த செலவே பிடிக்கும் என்றும் மிகவும் பாதுகாப்பானது என்றும் சொல்லப்பட்டது. ஆனால், இந்த நோக்கங்களில் எதையும் ஷட்டில் பூர்த்தி செய்யவில்லை என்பது பல நிபுணர்களின் புகாராகும்.
ஒரு ஷட்டில் உயரே சென்றுவிட்டுத் திரும்பியதும் இரண்டே வாரத்தில் அதைச் செப்பனிட்டு மறுபடி செலுத்தத் தயார் செய்துவிட முடியும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், நடைமுறையில் ஆறு மாதங்கள் பிடித்தன.
ராக்கெட் மூலம் ஒரு விண்கலத்தைச் செலுத்துவதற்கு ஆகும் செலவில் 15-ல் ஒரு பங்குதான் ஷட்டிலுக்குச் செலவாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், ராக்கெட்டில் செலுத்துவதற்கு ஆவதைப்போல மூன்று மடங்கு செலவாகியது.
ஷட்டில் பூமிக்குத் திரும்புகையில் காற்று மண்டலம் காரணமாக அதன் வெளிப்புறப் பகுதிகள் பயங்கரமாகச் சூடேறும். விண்கலத்தையும் அத்துடன் உள்ளே இருக்கிற விண்வெளி வீரர்களையும் அந்த வெப்பம் தாக்காதபடி தடுக்க ஷட்டில் வாகனத்தின் வெளிப்புறத்தில் பல ஆயிரம் வெப்பத் தடுப்பு ஓடுகள் உண்டு. ஆனால், அவ்வப்போது இந்த வெப்பத் தடுப்பு ஓடுகள் இழக்கப்படும்.
இப் பிரச்னை ஷட்டில் வாகனங்களைக் கடுமையாகப் பாதித்தது. கொலம்பியா ஷட்டில் தரை இறங்குகையில் இந்த வெப்பத் தடுப்பு ஓடுகள் பல இடங்களில் இல்லாமல் போனதால் வெப்பம் உள்ளே தாக்கி கொலம்பியா தீப்பிடித்து வெடித்தது.
பொதுவில் ஷட்டில் உயரே செல்லும்போதுதான் இந்த ஓடுகள் பிய்த்துக்கொண்டு பறந்தன. அதாவது ஷட்டிலுடன் இணைந்த பெரிய எரிபொருள் டாங்கியில் மிகவும் குளிர்விக்கப்பட்ட எரிபொருள்கள் வைக்கப்பட்டன.
இந்த எரிபொருள்கள் ஆவியாகிவிடாமல் தடுப்பதற்கு எரிபொருள் டாங்கியின் வெளிப்புறம் மீது கெட்டியான நுரைபொருள் பூச்சு உண்டு. ஷட்டில் வாகனம் உயரே கிளம்புகையில் பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். அப்போது நுரைபொருளின் சில துண்டுப் பகுதிகள் பிய்த்துக்கொண்டு ஷட்டில் மீது அதி வேகத்தில் மோதியபோது ஷட்டிலின் வெப்பத் தடுப்பு ஓடுகள் பிய்த்துக் கொண்டன. இப் பிரச்சினை கடுமையாகியபோது விண்வெளி ஓடத்தின் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குறியாகியது.
இப்படியாகப் பல்வேறு காரணங்களால் இனி விண்வெளி ஓடம் மாதிரியில் புதிய வாகனத்தை மறுபடி உருவாக்கும் எண்ணத்தை அமெரிக்கா கைவிட்டு பழையபடி ராக்கெட் முறைக்கே மாறுவது என முடிவு எடுத்துள்ளது. ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று அமெரிக்க விண்வெளி ஓடம் மாதிரியில் ஸ்கைலான் என்ற விண்வெளி விமானத்தை உருவாக்குவதில் முனைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது பலவகைகளிலும் விண்வெளி ஓடத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.

என். ராமதுரை
 
                                   கீழே இருபது ரஷிய விண்வெளி ஓடம் சோயுஸ்



                                                சோயுஸ்  விண்கலத்தின் உள்ளே.
                           குறுகலான  இருக்கைகள்  (ஆனால்  மனிதனுக்கு  சேப்டி)
                 ஷட்டல் வகை விண்வெளி ஓடம்உள் அமைப்பு ஒரு பகுதி